திருத்தணி; கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவில்களில், மூலவருக்கு பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை, 5:30 மணிக்கு காகட ஆரத்தி நடந்தது. மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. மாலையில், சந்திய ஆரத்தி மற்றும் சேஜ் ஆரத்தி நடந்தது.திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வழிபட்டனர். நகரி பகுதியில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலிலும், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.