பதிவு செய்த நாள்
06
ஏப்
2018
12:04
நாமகிரிப்பேட்டை: சீராப்பள்ளி, மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. பொங்கல் பண்டிகை, தீ மிதிவிழா பங்குனி இறுதியில் நடக்கும். இந்தாண்டு விழா, நேற்று கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வரும், 9ல் பூவோடு எடுத்தல், சாட்டையடி விழா, 10 காலை, 8:00 மணிக்கு பால்குடம் எடுத்தல், இரவு, 9:00 மணிக்கு சக்தி அழைத்தல் நடக்கிறது. 11 அதிகாலை பொங்கல் வைத்தல், 8:00 மணிக்கு தீ மிதி விழா நடக்கிறது. 12 இரவு, 10:00 மணிக்கு சத்தாபரணம் நடக்கவுள்ளது. 14 காலை, 7:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா முடிகிறது.