கடலாடி: கடலாடி அருகே ஆப்பனுார் அருணகிரி கொட்டகை கிராமத்தில் திருப்புகழை இயற்றிய அருணகிரிநாதருக்கு தனிக்கோயில் உள்ளது. கடந்த ஏப். 4 அன்று முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 10:30 மணிக்கு கோபுர கலசத்தில் சிவாச்சாரியார் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கினர். இரவு 10:00 மணிக்கு வள்ளி திருமண நாடகம் நடந்தது.