பதிவு செய்த நாள்
06
ஏப்
2018
12:04
திருவண்ணாமலை திருவண்ணாமலையில், சித்ராபவுர்ணமிக்காக நடந்த, முன்னேற்பாடு ஆலோசனை கூட்டத்தில், ”3,500 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என, கலெக்டர் கந்தசாமிதெரிவித்தார்.திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோயிலில், சித்ரா பவுர்ணமி அன்று, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்கிரிவலம் செல்வர்.
வரும், 29ல், காலை, 6:58 மணிக்கு, சித்ராபவுர்ணமி துவங்கி, மறுநாள், 30ல், காலை, 6:52 வரை, பவுர்ணமி திதி உள்ளதால், கிரிவலம் செல்ல உகந்தநேரமாக, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சித்ரா பவுர்ணமிக்கான, முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஆய்வு கூட்டத்திற்கு பின்,கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:கோயில் வளாகத்தில், பக்தர்கள் நடந்து செல்லும்போது, வெயிலின் தாக்கம் இல்லாமல் இருக்க, வெள்ளைகலரில், கூல் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், 50 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட், மற்றும் தர்ம தரிசன வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து துறை சார்பில், 3,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், 108 அவசரகால ஆம்புலன்ஸ், 15 இடங்களில் நிறுத்தவும், ஆறு இடங்களில் மருத்துவ முகாம் அமைத்திடவும், ஒன்பது, தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.