ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் யானை ராமலெட்சுமி தண்ணீர் வசதி இன்றி, சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில் தவிக்கும் நிலை உள்ளது. கோடை துவங்கியதால் ராமேஸ்வரத்தில் வெயில் நிலவுகிறது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பகலில் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வடக்கு வாசல் மண்டபத்தில் யானை ராமலெட்சுமி,12,நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு தரை தளத்தில் மணல் பரப்பி இயற்கை சூழலுடன் இருந்தாலும், தற்போதைய வெப்ப சலனம் மற்றும் மேற்கூரை சிமென்ட் சீட்டினால் வீசும் அதிக வெப்பத்தில் யானை தவிக்கிறது. வெப்ப சலனத்தில் இருந்து யானையை பாதுகாக்க, இயற்கை சூழலுடன் சவர் பாத் மற்றும் குளம் அமைத்திட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர். கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி கூறியதாவது: கோயில் வடக்கு நந்தவனத்தில் ஆகம முறைப்படி யானைக்கு இயற்கை சூழல் நிறைந்த புதிய ெஷட் அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.