பதிவு செய்த நாள்
07
ஏப்
2018
11:04
ஊத்துக்காடு: ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் பிரம்மோற்சவம், இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெறும். நடப்பாண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஊத்துக்காடு எல்லம்மன் கோவிலில், இன்று காலை, 4:30 மணிக்கு, பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து, தினமும் பல வாகனங்களில், எல்லம்மனுக்கு உற்சவங்கள் நடைபெறும். பிரம்மோற்சவத்தின், 10வது நாள் மாலை, எல்லம்மன் தெப்பலில் எழுந்தருள உள்ளார்.