சீர்காழி திருத்தாளமுடையார் கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2018 11:04
மயிலாடுதுறை: சீர்காழி திருக்கோலக்காவில் உள்ள திருத்தாளமுடையார் சுவாமி கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தார். நாகை மாவட்டம் சீர்காழி திருக்கோலக்காவில் ஒசைநாயகி அம்மன் உடனாகிய தாளபுரீஸ்வரர்சுவாமி திருக்கோயில் உள்ளது. 7 ம் நூற்றாண்டில் உமையம்மையிடம் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர் பெருமான், தனது தந்தையுடன் திருத்தாளமுடையார் கோயிலுக்கு எழுந்தருளிய போது கோயில் திருக்குளத்தில் மீன்கள் துள்ளி குதிப்பதை பார்த்து திருஞான சம்பந்தர் தனது கைகளை தட்டியவாறு திருப்பதிகம் பாடினார். அப்போது சிவபெருமான் குழந்தையின் பிஞ்சுகைகள் வலிக்குமே என திருஞானசம்பந்தருக்கு பொற்தாளம் வழங்கினார். பொற்தாளத்தை தட்டினால் ஓசை வரவில்லை. உடனே அம்மன் அதற்கு ஓசை வழங்கினார். ஆதலால் இக்கோயில் மூலவர் தாளபுரீஸ்வரர் எனவும், அம்மன் ஓசைநாயகி அம்மன் என்றழைக்கப்படுகிறார். வாய் பேச முடியாத குழந்தைகள் இக்கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம்செய்து அம்மனுக்கு தேன் நைவேத்தியம் செய்து தரிசித்து, அந்த தேனை உண்டால் சக்தியை பெறமுடியும். இதுபோல் இக்கோயிலில் வழிப்பாடு செய்து சுமார் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் பேசும் திறனை பெற்றுள்ளனர்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலுக்கு தேமுதிக. தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் சுவாமி தரிசனம் செய்யவந்தார். மூலவர் திருத்தாளமுடையார் தரிசித்து பின்னர் ஓசைநாயகி அம்மனுக்கு தேன் வழங்கினார். தொடர் ந்து கோயில் கார்த்திகேய சிவச்சாரியார் வாக்குவாதினி மூல மந்திரம் பாராயணம் செய்து அர்ச்சனைகள் நடத்தி, தீபாராதனை செய்தார். பின்னர் அந்த தேனை சிவாச்சாரியார் விஜயகாந்த் வாயில் ஊட்டினார். விஜயகாந்துடன் அவரது மைத்துனரும், தேமுதிக துணை பொது செயலாளருமான சுதீஷ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.