பதிவு செய்த நாள்
07
ஏப்
2018
11:04
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோவிலில், சமையலர்கள் விடு முறையில் சென்றதால், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை கண்டித்து, இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி, பர்தவர்த்தினி அம்மனுக்கு, கோவில் மடப்பள்ளியில் தயாராகும் பிரசாதம் சர்க்கரை - வெண் பொங்கல், புளியோதரை பூஜைக்கு பிறகு, பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், கடந்த நான்கு நாட்களாக மடப்பள்ளி இரு சமையலர்கள் விடுப்பில் சென்றதால், அதற்கு பதிலாக மாற்று சமையலர் நியமிக்கவில்லை.
இதனால், நான்கு நாட்களாக சுவாமி, அம்மனுக்கு நை வேத்தியம், பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற் றத்துடன் திரும்பினர். இதை கண்டித்து நேற்று கோவில் மடப்பள்ளி முன், அமர்ந்து இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோவில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மடப்பள்ளி சமையலர்கள் விடுப்பில் சென்றாலும், மற்றொருவர் பணிபுரிகிறார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்காதது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.