பதிவு செய்த நாள்
07
ஏப்
2018
12:04
சேலம்: எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், பால்குட ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. சேலம், குமாரசாமிப்பட்டி, எல்லைப் பிடாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 23ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, பால்குட ஊர்வலம் நடந்தது. 50க்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடங்களை சுமந்து ஊர்வலம் வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 108 விசேஷ சங்கு பூஜை, வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊர்மக்கள் மற்றும் கட்டளைதாரர்கள் சார்பில், இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம்...: இடைப்பாடி அருகே, சித்தூர், படவெட்டியம்மன் கோவில் பங்குனி திருவிழா, கடந்த, 3ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று, தேரோட்டம் நடந்தது. அதில், ஊர் முக்கிய பிரமுகர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கிவைத்தனர். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்த தேர், சித்தூர் அம்மன் கோவிலை அடைந்தது.
* இடைப்பாடி, பூலாம்பட்டி அருகே, சரவரெட்டியூர், மேட்டுமுனியப்பன் கோவில் பங்குனி திருவிழா, கடந்த, 22ல் தொடங்கியது. நேற்று தேர்பவனி நடந்தது. அதில், வெள்ளி கவசத்துடன் முனியப்பன், கோவிலைச் சுற்றி வலம் வந்தார்.