பதிவு செய்த நாள்
07
ஏப்
2018
12:04
கிணத்துக்கடவு:கோதவாடியில், 350 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் இருந்தும், மழை பெய்யாததால், கடும் வறட்சியில் சிக்கியுள்ளது. இதனால், விவசாயம் பாதித்துள்ளது. கால்நடைகள் தீவனத்துக்கும், குடிநீருக்கும் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மழை பெய்து குளம் நிரப்ப வேண்டும். தென்னைகளை பாதுகாக்க வேண்டும். பயிர்கள் செழிப்படைய வேண்டும் என, கோதவாடி, குருநல்லிபாளையம், கொண்டம்பட்டி எம்மேகவுண்டம்பாளையம் கிராமங்களை சேர்ந்தவர்கள், குளத்தை சுற்றி குடிகொண்டுள்ள தெய்வங்களை வழிபட்டனர். விநாயகர் கோவிலில் துவங்கிய சிறப்பு வழிபாடு, காளியம்மன், பழனியாண்டவர், ஏழுபுள்ளத்தாச்சி அம்மன், கன்னிமார், முனியப்பன், ராமர் மற்றும் வளையல்கார அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, குளக்கரையில் உள்ள வஞ்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மழை வேண்டிய நடந்த பூஜையில் ஏராளானமான பொதுமக்களும், விவசாயிகளும் பங்கேற்றனர்.