பதிவு செய்த நாள்
07
ஏப்
2018
12:04
எலச்சிபாளையம்: பெரியமணலி, கரியகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேர்கள் இழுக்கப்பட்டன. எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில் பிரசித்தி பெற்ற கரியகாளியம்மன் கோவிலில், திருவிழாவையொட்டி, மார்ச், 27ல் சுவாமிக்கு பூச்சாட்டல் நடந்தது. 30ல் கிராமசாந்தி, 31ல் கொடியேற்றம், கடந்த, 3ல் சக்தி அழைத்தல், 4 காலை, 10:00 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டு, மாலை, 4:00 மணிக்கு, கரியகாளியம்மன் கோவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, மாரியம்மன் தேர் இழுக்கப்பட்டது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, முதலில் நாகேஸ்வரர் சிவகாமியம்மை தேரும், 5:00 மணிக்கு, வேணுகோபால்சுவாமி, பாமா ருக்மணியம்மன் தேரையும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.