பதிவு செய்த நாள்
07
ஏப்
2018
12:04
நாமகிரிப்பேட்டை: மெட்டாலா, ஆஞ்சநேயர் கோவில் தீமிதிவிழா, நாளை நடக்கிறது. நாமகிரிப்பேட்டை அடுத்த, மெட்டாலா கனவாயில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், பங்குனி கடைசி ஞாயிறு தீமிதி விழா நடைபெறும். இந்தாண்டு விழா, நாளை நடக்கிறது. முன்னதாக, இன்று இரவு, நாமகிரிப்பேட்டையில் ஆஞ்சநேயர் பந்தசேர்வை திருவீதி நடக்கும். நாளை காலை, 10:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு கன்னிமார் ஊற்றிலிருந்து, சுவாமிக்கு சக்தி அழைத்தல், சுவாமி நீராடுதல்; மாலை, 6:00 மணிக்கு தீ மிதித்தல் நடக்கிறது. அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.பி., சுந்தரம், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.