Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வில்லிப்பாக்கத்தில் பெருமாள் சிலை ... விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல்விழா விருதுநகர் பராசக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
களை கட்டிய கம்பம் ஊர்வலம்: மஞ்சள் நீரால் குளிர்ந்தது ஈரோடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2018
05:04

ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவில், கம்பம் ஊர்வலத்தால், மஞ்சள் மாநகரான ஈரோடு, மஞ்சள் நீரால் குளித்தது. ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் தேர்த்திருவிழா நடந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியான, கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

Default Image
Next News

   
மதியம், 3:05 மணிக்கு, பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் எடுக்கப்பட்டன. மூன்று கோவில் கம்பங்களும், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மணிக்கூண்டு பகுதியில் ஒன்று சேர்ந்தது. அதன்பின், ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக, ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்துாரி அரங்கநாதர் கோவில் முன், கொண்டு வரப்பட்டு, கம்பங்களை தோளில் சுமந்து, பூசாரிகள் ஆடினர். அதன் பின் காமராஜர் ரோடு, பிரப் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை, மேட்டூர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், சத்தி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில் வீதி, மணிக்கூண்டு, கச்சேரி வீதி வழியாக, காரை வாய்க்காலை இரவில் அடைந்தது.கம்பம் ஊர்வலத்தின் போது, வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கம்பங்களின் மீது, உப்பு, மிளகு கலந்து துாவி வழிபாடு செய்தனர்.   

கம்பம் எடுத்தவுடன், மாநகரில் உள்ள அனைத்து வீதிகளிலும், பொதுமக்கள், சிறுவர், சிறுமியர், பெண்கள், இளைஞர்கள் என, அனைவரும், ஜாதி, சமய, பேதங்களை கடந்து, ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை தெளித்து, சந்தோஷம், ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். ஊர்வலத்தில் பலர், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பல்வேறு வேடமிட்டு வந்தனர். விழாவை கொண்டாடும் வகையில், அனைத்து நிறுவனங்கள், கடைகளுக்கு ஈரோட்டில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மொத்தத்தில் மஞ்சள் நீராட்டத்தால், மாநகம் மஞ்சளில் குளித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar