பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, வக்கம்பாளையம் முருகன் கோவிலில், மழை வேண்டி யாக பூஜை நடந்தது.பொள்ளாச்சி அருகே வக்கம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் சார்பில், முருகன் கோவிலில், மழை வேண்டி யாக பூஜை நடந்தது. முதலில், வருண பகவானை வேண்டி யாக பூஜை மற்றும் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதனுள் அமர்ந்து, அர்ச்சகர்கள் வருண ஜபம் செய்தனர். தொடர்ந்து, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.