ராஜபாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா 144 தடையுத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2018 11:04
ராஜபாளையம்:ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா, சமூகத்தினரிடையே எழுந்துள்ள இணக்கமற்ற சூழ்நிலையை கருதி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நேற்று பங்குனி சப்பர திருவிழாவும், ஏப். 20 ல் கொடியேற்றம் நடைபெற இருந்த சூழ்நிலையில், இப்பகுதி சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதை கருதி ஏப். 7 நள்ளிரவு 12:00 மணி முதல் ஏப். 21 நள்ளிரவு 12:00 மணி வரை தடை அமலில் இருக்கும், என ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டும் தடை ஏற்பட்டுள்ளதையடுத்து, இக்கோயிலில் நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டு வரும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த பக்தர்கள் மனதில், வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக, பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.