திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் லட்சுமி தீர்த்தக் குளத்தை சீரமைத்து தண்ணீர் தேக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பெய்தால் மட்டுமே இக்குளம் நிரம்பும். குளத்திலுள்ள மீன்களுக்கு உப்பு, மிளகு, பொரி போட்டால் மனிதர்களின் உடலில் ஏற்படும் பரு, தேமல் போன்ற நோய்கள் குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. சில ஆண்டுகளாக மழையின்றி குளம் வறண்டு கிடக்கிறது. மேலும் குளத்தின் உள்பகுதியிலுள்ள கல் சுவரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. அங்கு தொடர்ந்து கற்கள் பெயர்ந்து விழுந்து வருகிறது. சேதமடைந்த பகுதியை சீரமைத்து நிரந்தரமாக தண்ணீர் தேக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.