பதிவு செய்த நாள்
09
ஏப்
2018
12:04
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த, மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா நேற்று நடந்தது. நாமகிரிப்பேட்டை அடுத்து, ஆத்தூர் மெயின் ரோட்டில் மெட்டாலா கணவாய் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற, ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. தீ மிதி விழா, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இந்தாண்டு தீமிதி விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு, நாமகிரிப்பேட்டையில் ஆஞ்சநேயர் பந்தசேர்வை திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, சிறப்பு பூஜையுடன் புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடந்தது. எம்.எல்.ஏ., சந்திரசேகரன், முன்னாள் ஒன்றிய தலைவர் பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., கலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். மதியம், கன்னிமார் ஊற்றிலிருந்து சுவாமிக்கு சக்தி அழைத்தலும், சுவாமி நீராடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அக்னி தீ மிதி விழா தொடங்கியது. முதலில் பூசாரியும் இரண்டாவதாக சுவாமியுடன் பக்தர்களும் இறங்கினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.