பதிவு செய்த நாள்
09
ஏப்
2018
01:04
தலைவாசல்: பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பங்குனி மாத அஷ்டமி, திரியம்பகாஷ்டமியாக அழைக்கப்படுகிறது. அதையொட்டி, தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு, நேற்று, சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. நெய், எண்ணெய் ஆகியவற்றால், பக்தர்கள் தீபமேற்றி, பைரவரை வழிபட்டனர். பின், எட்டு பைரவர்களுக்கும், தனித்தனியாக சிறப்பு வழிபாடு நடந்தது. காமநாதீஸ்வரர் வெள்ளி காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அஷ்டபுஜ காலபைரவர் சன்னதியில், சிறப்பு யாகம் நடந்தது. அதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
* ஆத்தூர், கைலாசநாதர் கோவிலிலுள்ள, பிரித்தியங்கிரா தேவி மற்றும் சொர்ண பைரவருக்கு, உலக நன்மை வேண்டி, சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது. இதையொட்டி, சுவாமிகள் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன் பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.