தளவாய்புரம்: தளவாய்புரம் பகுதியில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தளவாய்புரம், கொம்மந்தபுரம் மற்றும் அதே பகுதியில் ஆறு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் உள்ளிட்ட மூன்று முக்கிய கோயில்களில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று துவங்கியுள்ளது. இதை முன்னிட்டு செட்டியார்பட்டி நகர் காங்கிரஸ் சார்பில் மோர் பந்தலை மேற்கு மாவட்ட காங்., தலைவர் தளவாய்பாண்டியன், மாவட்ட பொது செயளாளர் மகேஸ்வரன் திறந்து வைத்தனர். நகர தலைவர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் அய்யனார், வட்டாரதலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர். நகர துணைதலைவர்கள் மீனாட்சிசுந்தரம் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.