காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த ஏப்.1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மாலை 6:00 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பால்குடம் மற்றும் வேல்காவடி எடுத்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாலை 4:00 மணிக்கு முத்தாலம்மன் கோயிலிலிருந்து கரகம் மற்றும் மது, முளைப்பாரி ஊர்வலம் மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. இன்று மாலை 6:00 மணிக்கு மேல் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.