உடுமலை;உடுமலை, சக்தி விநாயகர் கோவிலில், சைவ சித்தாந்த மாநாடு மற்றும் பன்னிரு திருமுறை இன்னிசை விழா, அன்னதான அறக்கட்டளை 16ம் ஆண்டு துவக்க விழா நேற்று துவங்கியது.முதல் நாளான நேற்று, காலை, 7:45 மணிக்கு திருவாசகம் முதல் பதிகம் முதல் 4 பதிகம் வரை ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிவஞான போதம் விளக்கமளிக்கும் நிகழ்வு நடந்தது. காலை, 10:30 மணிக்கு குழந்தைகள் பாடும், பன்னிரு திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், தொடர்ந்து சைவ சித்தாந்த நிகழ்ச்சியும் இடம்பெற்றன. இன்று, திருவாசகம் 5ம் பதிகம் முதல் 20ம் பதிகம் வரை முற்றோதல் நடக்கிறது.