பதிவு செய்த நாள்
09
ஏப்
2018
01:04
சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில், ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பணிகள் மீண்டும் துவக்கப்படும், என, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், சென்னை ஆலோசனை குழு தலைவர், ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்தார். சென்னை, தி.நகரில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், தகவல் மையம் மற்றும் ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இதற்கு, ஆலோசனை வழங்க, ஆந்திர அரசு குழுவை நியமித்துள்ளது. அந்த குழுவின் தலைவர், என்.ஸ்ரீகிருஷ்ணா, துணை தலைவர், கூடுரு ராதாகிருஷ்ணா மற்றும் 11 உறுப்பினர்கள், நேற்று பொறுப்பேற்றனர்.
பின், கிருஷ்ணா, கூடுரு ராதாகிருஷ்ணா அளித்த பேட்டி: கிழக்கு கடற்கரை சாலையில், ஏழுமலையான் கோவில் கட்ட, சில ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசிடம் இடம் கேட்கப்பட்டது. அப்போது, அங்கு, 30 ஏக்கர் இடம் அடையாளம் காணப்பட்டது. பின், அந்த பணிகள் துவங்கவில்லை. தற்போது, மீண்டும், கிழக்கு கடற்கரை சாலையில், கோவில் கட்டுவது தொடர்பாக, தமிழக அரசிடம் பேச்சு நடத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே வழங்கிய, அதே இடம் வழங்கப்படுமா அல்லது வேறு இடம் கிடைக்குமா என, தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.