பதிவு செய்த நாள்
09
ஏப்
2018
01:04
ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் திருவிழா, மறு பூஜையுடன் நேற்று நிறைவடைந்தது. விழா நடந்த நாட்களில், சிறப்பு கட்டண தரிசனத்தில், 33 ஆயிரம் பேர், அம்மனை தரிசித்துள்ளனர். இதன் மூலம் பத்து லட்சம் ரூபாய் அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரியமாரியம்மன் கோவில் அலுவலக பணியாளர் கூறியதாவது: பெரியமாரியம்மன் கோவில் திருவிழா சமயத்தில், கோவிலுக்கு உள்ளே வர, மூன்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், 25 ரூபாய் கட்டண வழியில், 26 ஆயிரத்து, 354 பேர், 50 ரூபாய் கட்டண வழியில், 6,417 பேர், என, மொத்தம், 32 ஆயிரத்து, 764 பேர் உள்ளே வந்து, சென்றுள்ளனர். இதன் மூலம், ஒன்பது லட்சத்து, 79 ஆயிரத்து, 700 ரூபாய் கோவிலுக்கு வருமானம் கிடைத்துள்ளது. மற்ற இரு கோவில்களிலும், சிறப்பு வழி ஏற்பாடு செய்யவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.