Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராயபுரம் சர்ச் கொடியேற்றம் சிவகாசி மாரியம்மன் பங்குனி விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் சிவகாசி மாரியம்மன் பங்குனி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க மழை பொழிய வைத்த ஆதிசங்கரர்!
எழுத்தின் அளவு:
தங்க மழை பொழிய வைத்த ஆதிசங்கரர்!

பதிவு செய்த நாள்

09 ஏப்
2018
02:04

காலடி: ஆதிசங்கரரின் அவதார தலமான காலடி கிருஷ்ணர் கோயிலில், அட்சய திரிதியையை ஒட்டி ஏப்ரல் 16ம் தேதி கனகதாரா யாகம் நடக்கிறது. ஆதிசங்கரர், அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில், ஒரு ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷாம் தேஹி என்று பிக்ஷை கேட்டார். அந்த பெண், தன் கணவர் ஏகாதசி விரதம் முடித்து உண்பதற்காக வைத்திருந்த உலர்ந்த நெல்லிக்கனியை தானமாக கொடுத்தார்.

அந்த ஏழையின் செயல் ஆதிசங்கரரின் உள்ளத்தை உருக்கியது. இது போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கும் உதவும் என்ற அடிப்படையில், ஆதிசங்கரர் மகாலட்சுமியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். மகிழ்ந்த மகாலட்சுமி, அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விதத்தில், எர்ணாகுளம் அருகிலுள்ள காலடி கிருஷ்ணன் கோயில் யாக மண்டபத்தில் வருகிற ஏப்ரல் 16 முதல் 20 வரை கனகதாரா யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள், கனகதாரா யந்திரம் வைத்து, 32 நம்பூதிரிகள், 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி அர்ச்சனை செய்வர். ஏப்ரல் 18 அட்சய திரிதியை அன்று காலை 9 மணிக்கு, மகாலட்சுமிக்கு தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகளால் அபிஷேகம் நடக்கும். அபிஷேக தங்க, வெள்ளி நெல்லிக்கனிகள் விற்பனை செய்யப்படும். இந்த நெல்லிக்கனிகளை பக்தர்கள் வாங்கி சென்றால், சிறந்த உடல் வளமும், செல்வவளமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

கனகதாரா எந்திரம்: ரூ. 401
தங்க நெல்லிக்கனி: ரூ. 12,001
வெள்ளி நெல்லிக்கனி: ரூ. 2,001
பிராமண போஜனம்: ரூ. 3.001
லெக்ஷ்மி நாராயண அபிஷேகம்: ரூ. 17,001
பிராமண தட்சிணை: ரூ. 1001
அன்னதானம்: ரூ. 6001
கனகதாரா அர்ச்சனை: ரூ. 101
நெல்லிக்கனி பாரா: ரூ. 51
நெல்லிக்கனி சமர்ப்பணம்: ரூ. 10

தொடர்புக்கு:
காப்பிள்ளி ஸ்ரீகுமார் நம்பூதிரி,மேனேஜிங் டிரஸ்டி, ஸ்ரீகிருஷ்ணன் கோயில் காலடி- 683 574, எர்ணாகுளம் மாவட்டம், கேரளா

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar