பதிவு செய்த நாள்
10
ஏப்
2018
10:04
சிவகாசி:சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப். 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவின் போது அம்மன், தினமும் பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் உலா வந்து, மண்டகப்படிகளில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
9ம் நாளான நேற்று, வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு, பக்தர்கள் பொங்கல், அக்னிசட்டி ஏந்தி வேண்டுதலை நிறைவேற்றினர். உடலில் கயிறுகுத்தி, முடி, முத்து காணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை என பக்தர்கள்நேர்த்திகடன் செலுத்தினர். கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி குடும்பத்தோடு, கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலில் வேப்பிலையில் உருண்டு வணங்கினர். உருவங்கள் வாங்கியும் படைத்தனர். மாலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி வலம் வந்தார். நாளை (ஏப்.11) காலை 10:00 மணிக்கு ரதம் வடம் தொடுதல் நிகழ்ச்சி,மாலை தேர் திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டு நிர்வாகிகள் செய்கின்றனர்.