திருமுருகன்பூண்டி: திருமுருகன்பூண்டி ஆதி முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் அம்மனுக்கு பூச்சொறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.