சேலம்: சேலம், எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில், குண்டம் திருவிழா மார்ச், 23ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பொங்கல் வைபவம், பால்குட ஊர்வலம், அக்னி குண்டம், சத்தாபரணம், மஞ்சள் நீராட்டு ஊர்வலம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று மாலை, திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இன்று இரவு, விழாவின் நிறைவு நிகழ்ச்சியான கம்பம் எடுத்தல் நடைபெறுகிறது.