Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவி கருமாரியம்மன் கோவில் ... ஏப்.29ல் வைகை ஆற்றில் ’அழகர்’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாழவந்தி மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
வாழவந்தி மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2018
12:04

மோகனூர்: வாழவந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள், குண்டம் இறங்கி, வேண்டுதலை நிறைவேற்றினர். மோகனூர் அடுத்த, எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. 18 பட்டிகளுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில், 2013ல் இரு தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து, நான்காண்டுகளாக, திருவிழா தடைபட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், இந்தாண்டு விழா, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும், காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் இரவு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, யாகம் வார்த்து தீக்குண்டம் பற்ற வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி, அங்க பிரதட்சணம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், 1:00 மணிக்கு, 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று காலை, 6:00 மணிக்கு கிடாவெட்டு, மாலை, 4:00 மணிக்கு, தேர் திருவீதி உலா, நாளை அதிகாலை, 5:00 மணிக்கு, கம்பம் பிடுங்கி சிங்காரப்பாழியில் விடப்படுகிறது. அதையடுத்து, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar