பதிவு செய்த நாள்
10
ஏப்
2018
12:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவை யொட்டி ஏப்., 29 இரவு பெருமாள் ’கள்ளழகர்’ திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கவுள்ளார். இக்கோயிலில் ஏப்.,25 காலை 9:30 மணிக்கு காப்புக்கட்டு துவங்கி, அன்று முதல் நான்கு நாட்கள் பெருமாள் ஆடி வீதிவலம் வருவார். ஏப்.29ல் காலை 8:00 மணிக்கு மேல் பெருமாள், கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
அன்று இரவு 2:00 மணிக்கு மேல் சுந்தரராஜப் பெருமாள், கோடாரி கொண்டையிட்டு, தங்க நெல் மணி தோரணம் கட்டி, ஈட்டி, வேல், கம்பு, வளரி ஏந்தி தீவர்த்திகள் வெளிச்சத்தில் ’கள்ளழகர்’ பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்குகிறார். ஏப்., 30ல் காலை 9:05 மணிக்கு தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அழகர் புறப்பாடாகி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சியபடி, மதியம் 2:00 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அருள்பாலிப்பார். அன்று இரவு காக்காதோப்பு பெருமாள் கோயிலஅடைவார். மே 1ல் வண்டியூரில் இருந்து சேஷ வாகனத் தில் பெருமாள் அலங் காரமாகி, மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்து, அன்று இரவு விடிய, விடிய தசாவதார சேவை நடக்கும். ஏற்பாடுகளை சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.