திருவெற்றியூர் கோயில் சித்திரை திருவிழா ஏப். 20ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2018 12:04
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக் கோயில் சித்திரை திருவிழா ஏப்.20 காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.24ல் திருக்கல்யாணமும், 28ல் காலை 9:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். விழா நாட்களில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, பூதம், அன்னவாகனம், வெள்ளி ரிஷப வாகனம், நந்தி, சிம்மம், வெட்டுங்குதிரை, காமதேனு போன்ற பல வாகனங்களில் பாகம்பிரியாள் தாயார் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 29ல் தீர்த்தவாரியும், அன்று இரவு பஷ்ப பல்லக்கும், மறுநாள் கொடியிறக்கமும் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவில் கலைநிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண் காணிப்பாளர் பரம ஸ்வரபாண்டியன், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.