பதிவு செய்த நாள்
10
ஏப்
2018
12:04
ப.வேலூர்: பொத்தனூர், சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் தேர்த்திருவிழா துவங்கியது. ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் தேவராயசமுத்திரம் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை முதல், காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். வரும், 15 மாலை மறுகாப்பு கட்டுதல் நடக்கிறது. வரும், 16 முதல், 21 வரை சப்பர வாகனம், சிம்மம், பூதம், அன்னப்பட்சி, யானை, பூந்தேர் ஆகிய வாகனங்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி வீதி உலா நடைபெறவுள்ளது. வரும், 22 மாலை வடிசோறு மற்றும் வெட்டுங் குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்கவுள்ளது. 23 மாலை, தீர்த்தவாரி, 24 காலை அம்மன் திருத்தேர் வீதி உலா, 25 காலை அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், மாலையில் பொங்கல், மாவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. 26ல் கம்பம் பிடுங்கி, ஆற்றில் விடுதல் மற்றும் கிடாவெட்டு, 27 காலை மஞ்சள் நீராடல், மாலை முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் இந்திரா, செயல் அலுவலர் சாந்தி செய்து வருகின்றனர்.