பதிவு செய்த நாள்
10
ஏப்
2018
12:04
ஓமலூர்: தமிழகம் முழுவதும், இந்துசமய அறநிலையத்துறையில் கீழ் உள்ள, கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து கணக்கிடும் பணிகள் நடந்து வருகின்றன. காடையாம்பட்டி சின்னத்திருப்பதியில் உள்ள, பிரசன்னவெங்கட் ரமண சுவாமி கோவில் செயல் அலுவலர் கீழ் உள்ள, 13 கோவில்கள் உள்ளன. அதற்கு சொந்தமான நிலங்கள், கணக்கெடுப்பு நடத்த, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி தலைமையில், ஓய்வு பெற்ற நில அளவையர், கோவில் செயல் அலுவலர், வி.ஏ.ஓ.,க்கள் என நான்கு பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நிலத்தில் மரங்கள், வீடுகள், கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதா என கணக்கிட்டு, அறநிலையத்துறைக்கு அறிக்கை அனுப்பும் பணி நடந்து வருகிறது. நேற்று, தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி மாரியம்மன் கோவிலுக்குரிய நிலங்களை கணக்கிடும் பணி நடந்தது. தொடர்ந்து, பூசாரிப்பட்டி, காமலாபுரம், பல்பாக்கி, பண்ணப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில் நிலங்கள் அளவிட உள்ளனர்.