பழநி முருகன் கோயிலுக்கு 91ம் ஆண்டாக தீர்த்தக்காவடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2018 11:04
பழநி: கடந்த 91 ஆண்டுகளாக பழநி முருகன் கோயிலுக்கு திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பொன்னுக்காளிபாளையம், அமராபதிபாளையம் பகுதி பனிரெண்டாம் பக்த திருக்கூட்டத்தார் தீர்த்தக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பங்குனி உத்திரவிழா முடிந்த பின்னரும் பழநி முருகன்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்ட பக்தர்கள் கொடுமுடியில் தீர்த்தக்காவடி எடுத்துவந்து அபிேஷகம் செய்கின்றனர். திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பொன்னுக்காளி பாளையம், அமராபதிபாளையம் கூடிய பனிரெண்டாம் தீர்த்தக்காவடி குழுவினர் 91வது ஆண்டாக பத்துநாட்கள் யாத்திரையாக வந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீர்த்தக் காவடிகளுடன் கிரிவலம் வந்தனர். பின்னர், தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். மண்டபத்தில் முருகனுக்கு ராஜஅலங்காரம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.