அனந்த சயன பத்மநாபர் தேனியில் 18 அடி நீள சிலை தயார்: சித்ரா பவுர்ணமியன்று பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2018 11:04
தேனி: தேனியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி நீளம் உள்ள அனந்த சயன பத்மநாபர் சிலை தயாராகி வருகிறது. தேனி பங்களாமேடு ஸ்ரீவெங்கடேஸ்வரா சிற்ப கலைக் கூடத்தை சேர்ந்த செல்வம், வெங்கடேஷ்குமார் 8 மாதத்திற்கு முன் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 80 டன் எடையுள்ள ‘ஆண்’ கருங்கல்லை தேர்வு செய்தனர். அதை 40 டன் எடையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அனந்த பத்மநாப சிலையாக சிற்பிகள் 18 பேர் உதவியுடன் செதுக்கினர்.
சித்ரா பவுர்ணமி தினத்தில் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள பாம்பார்பட்டி புவனேஸ்வரி உடனுறை ஆதி ஈஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. வெங்கடேஷ் குமார் கூறியதாவது: பொதுவாக அனந்த சயனர் சிலையில் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் தனியாகத்தான் இருக்கும். இதில் நாங்கள் ஒரே கல்லில் பெருமாளுடன் இணைந்தே செதுக்கியுள்ளோம். திருவனந்தபுரத்தில் மூலவர் பத்மநாப சுவாமி 21 அடி நீளத்தில் அமைந்திருப்பார். ஸ்ரீரங்கத்தில் 16 அடி நீளத்தில் மூலவர் அனந்த சயனத்தில் காட்சி தருவார். நாங்கள் செதுக்கியிருப்பது 18 அடி நீளம் உடையது, என்றார்.