பொள்ளாச்சி: பொள்ளாச்சி நந்தனார் காலனி மதுரை வீரன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.பொள்ளாச்சி பல்லடம் ரோடு, நந்தனார் காலனியில் பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சமேத மதுரைவீரன், பட்டதரசியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம், 20ம் தேதி நோன்பு சாட்டப்பட்டது.தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த, 9ம் தேதி திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அபிேஷக வழிபாடு நடந்தது. நேற்று காலை சுவாமி திருக்கல்யாணம், இரவு சக்தி கும்பம் கொண்டு வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று, சுவாமி உருவாரம் கொண்டு வருதல், மாவிளக்கு வழிபாடு நடக்கிறது. நாளை சக்தி கும்பம் கங்கையில் விடுதல், 13ம் தேதி மஞ்சள் நீராட்டு, 14ம் தேதி சிறப்பு அபிேஷகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.