சத்திரப்பட்டி, சத்திரப்பட்டி அருகே அய்யனாபுரம் மாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா நடந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். கரகாட்டம், அக்னி சட்டி,அலகு குத்தி , காளியம்மன் வேடமிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.மூன்றாம் நாளான நேற்று அம்மன் விசேஷ அலங்காரத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.