தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு, 1000 பால்குடம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தஞ்சையை அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் பிராமணர் சங்கம் சார்பில் பால்குடம் எடுத்து செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான பால்குட ஊர்வலம், தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே இருந்து நேற்றுகாலை புறப்பட்டது. 4 ஆயிரம் லிட்டர் பால் 1,000 பால்குடங்களில் எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. பின்னர் மாரியம்மனுக்கு பால் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இரவு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் அம்பாள் புறப்பாடு நடந்தது.