அம்மன் கோவில் திருவிழா: கத்தி போடும் நிகழ்ச்சி அமர்க்களம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2018 12:04
பந்தலுார்; பந்தலுார் அருகே, உப்பட்டி ஹட்டியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு திருவிழா கடந்த, 9ம்தேதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றுதல் காளியாட்டம், குரும்பர் ஆட்டம் நடந்தது. நேற்று காலை அபிேஷக ஆராதனை, நஞ்சன்கூடு புரோஹிதர்களின் யாக பூஜை, கங்கை மற்றும் குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் வீரகுமாரர்கள் நற்பணி சங்கத்தின் சார்பில், கத்தி சேவை நடந்தது. மாலையில் கங்கை சாமுண்டி அம்மனை வழியனுப்புதலும், இரவு, 9:00 மணிக்கு தாயாம்பக செண்டை மேளமும் நடந்தது. 11ம் தேதி (இன்று) காலை மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழாவில் நற்பணி சங்கத்தினர் மட்டுமின்றி, கோவில் பக்தர்களும் கத்திபோட்ட நிகழ்ச்சி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராஜூ மற்றும் நிர்வாக குழுவினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.