பதிவு செய்த நாள்
11
ஏப்
2018
01:04
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில்35 ஆண்டுக்கு முன்திருடு போன லட்சுமணர் சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுபோலீசார் விசாரிக்க வேண்டும்என பக்தர்கள் வலியுறுத்தினர். ராமநாதசுவாமி கோயிலில் ஐம்பொன்னில் உருவான ஒன்றரை அடி உயர லட்சுமணர் சுவாமி சிலை 1983ல் திருடப்பட்டது. விசாரித்த போலீசார் எட்டு ஆண்டுக்கு பின், சிலை குறித்து தகவல் கிடைக்கவில்லை என கோயில் இணை ஆணையருக்கு அறிக்கை அனுப்பி விட்டு ஒதுங்கினர்.கடந்த நவம்பரில் ராமேஸ்வரம் கோயிலில் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் ஆய்வு செய்து, லட்சுமணர் சிலை குறித்து விசாரிக்கப்படும், என்றார்.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட செயலர் ராமமூர்த்தி கூறுகையில், லட்சுமணர் சிலை திருட்டில் கோயில் ஊழியருக்கும் தொடர்பு உள்ளது. மேலும் சிலைகள் திருடப்பட்டனவா, தங்க சிலைகள் தயாரிப்பில் முறைகேடு நடந்துள்ளதா என ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும், என்றார்.கோயிலில் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் ஆய்வு செய்து, லட்சுமணர் சிலை குறித்து விசாரிக்கப்படும், என்றார். இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட செயலர் ராமமூர்த்தி கூறுகையில், லட்சுமணர் சிலை திருட்டில் கோயில் ஊழியருக்கும் தொடர்பு உள்ளது. மேலும் சிலைகள் திருடப்பட்டனவா, தங்க சிலைகள் தயாரிப்பில் முறைகேடு நடந்துள்ளதா என ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும், என்றார்.