ஒப்பலியப்பன் வேங்கடாசலபதி கோவில் பங்குனி பிரமோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2018 01:04
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதி கோவிலில் பங்குனி பிரமோற்சவ தேரோட்டம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பலியப்பன் வேங்கடாசலபதி சுவாமி கோவில், 108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்றதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், பூலோகவைகுண்டம், திருவிண்ணகர் என்றெல்லாம் போற்றப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து விழா நாட்களில் காலை, மாலை இருவேளையும் சுவாமி வீதிவுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை பெருமாள் தாயாரோடு திருத்தேரில் எழுந்தருளினார். காலை, 8 மணிக்கு பக்தர்களால் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 13ம் தேதி மூலவர் சன்னதியில் அன்னப்பெரும்படையலுடன் விடையாற்றி விழா நடக்கவுள்ளது.