பேரையூர், பேரையூர் அருகே அத்திபட்டி அக்னி மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்.,6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 5 நாட்களாக அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. மாவிளக்கு, முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.