பதிவு செய்த நாள்
11
ஏப்
2018
01:04
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் பேரூராட்சியில் அமைந்துள்ள, சின்னமாரியம்மன் கோவிலில், நாளை பூமிதி திருவிழா நடக்கவுள்ளது. கடந்த மாதம், 29ல், அம்மனுக்கு பூ போடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு அம்மன் வீதிஉலா, சிறப்பு அலங்காரம் நடந்து, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி எல்லம்மாள் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு பாலாபி?ஷகம் நடைபெறும். நாளை காலை, 6:00 மணிக்கு பூ மிதித்தல், 7:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மாலை, 5:00 மணிக்கு அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், பூங்கரக ஆட்டம் நடைபெறும். 13 மாலை, 6:30மணிக்கு கிருஷ்ணலீலை எனும் உடற்கூறு நிகழ்ச்சி, 47 சீடர்களுடன் நடைபெறும். 15 மாலை மஞ்சள்நீராட்டு விழா, 29 இரவு கம்பம் போடுவதோடு திருவிழா முடிவடைகிறது.