பதிவு செய்த நாள்
11
ஏப்
2018
01:04
கரூர்: கரூர் அடுத்த, க.பரமத்தி அருகே, எலவனூர் பால தண்டாயுதபாணி கோவிலில், சோமவார திருவிழா நடந்தது. இதில், கடந்த பங்குனி 1 முதல், பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். கடந்த, 7 இரவு, கொடுமுடிக்குச் சென்ற பக்தர்கள் அங்கு, காவிரி ஆற்றில் புனித தீர்த்தம் எடுத்து பாத யாத்திரையாக வந்தனர். காமாட்சி அம்மன், பாலதண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் முதலான, 18 வகை திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிகளை மலர்களால் அலங்கரித்து, பல்லக்கில் விநாயகர் கோவிலுக்கு எடுத்து சென்று, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.