பதிவு செய்த நாள்
12
ஏப்
2018
11:04
சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் விழா,ஏப்.,1 ல்கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன், தினமும் பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு 9 ம் நாள் விழாவில் பொங்கல் , அக்னி சட்டி , முடி , முத்து காணி க்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை என நேர்த்திக்கடன் செலுத்தினர். கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி குடும்பத்தோடு வந்த பக்தர்கள் , வேப்பிலையில் உருண்டு வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று காலை நாட்டாண்மைகாரர்கள் ரதம் வடம் தொடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில் சின்ன தேரில் விநாயகர் எழுந்தருள, ரதவீதிகளில் உலா வந்து நிலைக்கு வந்தார். அதன்பின் மாரியம்மன் எழுந்தருளிய தேரை , பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது கீழ ரதவீதி, தெற்கு ரத வீதியில் சென்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.