ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டினம் தையல்காரத்தெருவில் உள்ள மஞ்சன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு ஏப்., 1ல் காலை 7:30 மணிக்கு முத்து எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏப்., 3ல் காலை 7:30 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏப்.6 ல் மாலை 6:00 மணிக்கு பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. ஏப்.10 மாலை 4:00 மணிக்கு முகவை ஊரணியில் இருந்து கரகம், அக்னி சட்டியுடன் அம்மன் வீதியுலா நடந்தது. திருவிழா நாட்களில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிேஷகம் அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.