பதிவு செய்த நாள்
12
ஏப்
2018
03:04
திருப்பூர்: திருப்பூர், லட்சுமி நகர், 4 வது வீதி, ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பொங்கல் பூச்சாட்டு விழா நடந்தது. கடந்த மாதம், 27 ல் துவங்கியது. பொரி மாற்றுதல், கிராம சாந்தி, காப்புகட்டுதல், கும்பம் மற்றும் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, 108 பால்குட ஊர்வலம், அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.நேற்று காலை, அம்மனுக்கு பொங்கல் வைத்தல், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலிருந்து பட்டு கொண்டு வருதல், பூவோடு ஊர்வலம் மற்றும் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று, மாலை, 4:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. வரும், 14ம் தேதி, சித்திரைக்கனி தீர்த்த சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடக்கிறது.