கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் லட்சுமணர், பட்டாபிஷேக ராமர் சமேத சீதாபிராட்டியார், அனுமனுக்கு தனி சன்னதி பிரகாரத்துடன் கூடிய கோயில் உள்ளது. சித்திரை மாதம் சைத்ரோத்ஸவத்தை முன்னிட்டு ஏப். 21 இரவு 7 மணிக்கு அனுக்ஞை பூஜையும், மறுநாள் காலை 10 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஏப். 25ல் இரவு கருட சேவையும், ஏப். 27ல் இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக ராமர், சீதாவிற்கு திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. ஏப். 30 காலை 9 மணிக்கு தேரோட்டமும், மறுநாள் சேதுக்கரை கடலில் பெரிய திருவடி, சிறிய திருவடி மூலம் புனித தீர்த்தவாரியும் நடக்கும். தொடர்ந்து 10 நாட்களும் விசேஷ திருமஞ்சனம், சுந்தரகாண்டம், வீதியுலா புறப்பாடு, சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடைபெறும். ஏற்பாடுகளை ராமநாதபும் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.