ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2018 03:04
அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை, புளியம்பட்டி-திருநகரம் ஆயிரங் கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று துவங்கியது. இதையொட்டி மாலை 6 :00மணிக்கு .கொடிக்கு, சிறப்பு பூஜைகள் செய்ய கொடியேற்றப்பட்டது. 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், எட்டாம் நாள் விழாவாக, திருப்பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடக்கும். ஒன்பதாம் நாள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். அதன்பின், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். பத்தாம் நாள் திருத்தேர் பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் செய்கின்றனர்.