விருதுநகர், விருதுநகர் பராசக்திமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் பொங்கல்விழா ஏப்ரல் 1 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் அக்கினிசட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று மாலை 5:45 மணிக்கு அம்மன்கோயில் திடலில் . தேரோட்டம் துவங்கியது. தேரில் ,வெயிலுகந்த அம்மன், பராசக்தி மாரியம்மன் எழுந்தருள, பொட்டலில் இருந்து ஆஹா ...அய்யாேஹா கோஷத்துடன் பக்தர்கள் வடம்பிடித்து இழுத் தனர். தெற்குரத வீதியில் நிறுத்தப்பட்ட தேர், இன்று காலை 7:00 மணிக்கு மேலரத வீதி வழியாக அம்மன்கோயில் திடலை வந்தடையும்.