தேனி, தேனியில் அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் பிரசித்தி பெற்றது. மலை அடிவாரத்தில் ஓடையை ஒட்டியுள்ள இயற்கை சூழலில் இருப்பதால் தேனி மட்டுமல்லாது பிறமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் இங்கு வந்து செல்கின்றனர். தண்ணீர் வரத்து முழுமையாக நின்றுவிட்டதால், பக்தர்கள் ஓடையில் எஞ்சிய நீரில் குப்பையை கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் மற்றும் சுகாதாரகேடு நிலவும் சூழல் உள்ளது. தேனியை சேர்ந்த பக்தர் மகேந்திரன் கூறியதாவது: சித்திரை திருவிழாவை முன்னிட்டு மார்ச் 29 ல் கோயில் கொடியேற்றம் நடந்தது. கலைநிகழ்ச்சிகள், அன்னதானம், பூக்குழி மிதித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்கள் ஓடையில் குளிப்பது வழக்கம். ஆனால் தற்போது ஓடை கழிவுகள் நிறைந்து அசுத்தமடைந்துள்ளது. கோடைமழை பெய்தால் தண்ணீர் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. பக்தர்கள் நீராட நகராட்சி நிர்வாகம் ஓடையை துாய்மைப்படுத்த வேண்டும், என்றார்.